அடுத்தவர் குழந்தையை திருடும் ஆண்மையில்லாத பதிவர்கள்.......



இப்போதுள்ள பதிவர்களுக்கு என்ன எழுதுவது, எதை எழுதுவது என்று குழப்பம் போலும்.....சரக்கு இல்லாவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியதுதானே?
ஹிட்ஸ், ஓட்டு என்று புகழ்போதையில் மாட்டிக்கொண்டு விட்டதால்....சகட்டுமேனிக்கு சுட்டு தள்ளுகிறார்கள்.அதிலும் தமிழ்மணம் சூடான இடுகையிலும், டாப் 20-இடத்திலும் வர இப்போது அடுத்தவர்களின் பதிவை திருடுகிறார்கள்...மூளையை கசக்கி யோசித்து மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து டைப் செய்து அந்த பதிவை வெளியிட்டுவிட்டு தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் நாம் இணைத்த உடனே அந்த பதிவு வேறு திருட்டுபதிவரால் சுடப்பட்டு உடனே அது அவர்கள் பெயரிலும் வலையேற்றப்படுகிறது...சிலமணி நேரத்திலேயே அது சூடான இடுகைக்கும் அது வந்துவிடுகிறது. நிஜமாகவே அப்பதிவை எழுதிய பதிவர்கள் தலையில் துண்டைப்போட வேண்டியுள்ளது. ஏன் இந்த திருட்டுப்புத்தி? சே.... நாயும்  பிழைக்குமா இந்த பிழைப்பு. தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாதவர்கள் இன்னொருவன் குழந்தையை தத்து எடுப்பார்கள்...சிலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இருந்தும் தத்தெடுத்து கொள்வார்கள். இதில் இவர்கள் முதல் ரகம். குழந்தை பெற தகுதி இல்லாத ஆண்மையற்றவன் போல்தான் இவர்களின் பிழைப்பும்....அடுத்தவன் குழந்தையை திருடி தன் பெயரை இன்சியலாக்கி கொள்கிறார்கள். சமீபத்தில்கூட நிரூபன் என்ற பதிவர் அவரது பதிவை அதிகம் திருடுவதாக ஆதங்கப்பட்டிருக்கிறார்....பாவம்..அவரால் ஆதங்கப்படுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்...இப்படிப்பட்ட திருட்டு நாய்கள் இருக்கும்வரை பதிவு திருட்டை ஒழிக்க முடியாது.





Powered by Blogger